spacer
spacer
 
Environmental Impacts of the Sethusamudram on Sri Lanka PDF Print E-mail

சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறது இலங்கையின் வல்லுநர் குழு

 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக்கு அண்மையாக சர்ச்சைக்குரிய இந்தியாவின் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடரப்பட்டால் இலங்கையின் கடல் வாழ் உயிரினங்களுக்கு, மூலப்பொருட்களுக்கும் அது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென இந்தத்திட்டம் குறித்து ஆராய்ந்து வரும் இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவரான லங்கா ஹைட்ரோலிக் இன்ஸ்டிடியூட்டின் நிறைவேற்று அதிகாரி, மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார்.


பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகள் இந்தியத் தரப்பினரைவிட நன்கு விரிவான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலின் தற்போதைய ஓட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, இங்கே கடலின் மடியில் வாழக்கூடிய தாவரங்கள், மற்றும் உயிரினங்களிற்கும் அவை எதிர்வுகூற முடியாத அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார்.


இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடலின் மடியில் இருப்பதாகக் கூறப்படும் இராமர் சேது அணையின் குறுக்காக சுமார் 167 கிலோமீற்றர்கள் நீளமாக வெட்டப்படவுள்ள இந்தக் கப்பல் கால்வாய்த்திட்டம் குறித்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

பிபிசி தமிழ்

 

 
Next >